இந்தியத் தொலைத் தொடர்புச் சந்தை அதிரடியான மாற்றங்களைச் சமீபத்தில் சந்தித்துள்ளது. மொபைல் நெட்வொர்க் நிறுவனங்கள் தங்களது சேவைக் கட்டணங்களைத் தடாலடியாக உயர்த்தியுள்ள நிலையில், வாடிக்கையாளர்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மொபைல் கட்டணங்கள் உயர்த்தப்பட்டதால் பாதிப்பு எதுவும் இல்லை எனவும், மற்ற நாடுகளை விட இந்தியாவில் கட்டணங்கள் குறைவாகத்தான் இருக்கின்றன எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோவின் வருகைக்குப் பிறகு இந்திய தொலைத் தொடர்புச் சந்தையில் கடுமையான போட்டி நிலவுகிறது. ஜியோ, சந்தையில் நுழைந்தபோது மற்ற நிறுவனங்கள் ஜியோவுக்குப் போதிய அளவில் இண்டர்கனெக்ஷன் இணைப்புகளை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது. அதேபோல, மற்ற நெட்வொர்க்குக்கு மாறுவதும் கடினமாக இருந்தது. இதற்கு அதிக கால வரம்பு எடுக்கப்பட்டது.